உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி மது விற்ற 12 பேர் கைது

Published On 2022-01-17 09:32 GMT   |   Update On 2022-01-17 09:32 GMT
ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த  2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. எனினும் தடையை மீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது.
 
தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசாருடன் இணைந்து மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

நேற்று முன்தினம் தடையை மீறி மது விற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர். 390- க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைதொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது மாவட்டம் முழுவதும் தடையை மீறி மது விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மொத்தம் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News