உள்ளூர் செய்திகள்
முதுநிலை தலைமை அஞ்சலக தலைவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தேசிய திட்டக்குழு ஆணைய நிர்வாக இயக்குநர் பாராட்டு

Published On 2022-01-17 09:27 GMT   |   Update On 2022-01-17 09:27 GMT
தஞ்சை முதுநிலை தலைமை அஞ்சலக தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்.
தஞ்சாவூர்:

புதுடில்லி தேசிய திட்டக்குழு ஆணைய நிர்வாக இயக்குநர் ஆணைய நிர்வாக இயக்குநர் அருள்ஞானமோயிஸன் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்திற்கு 
அஞ்சலக பரிவர்த்தனை செய்வதற்காக வருகை புரிந்தார்.

அப்போது தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தை பார்வையிட்ட அவர் அஞ்சலக சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினையும், ஏற்றத்தினையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

அற்புதமான சூழலை தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் கொண்டு வந்ததை பாராட்டிய அவர் முதுநிலை தலைமை அஞ்சலக தலைவர் அருள்தாசுக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசினையும் வழங்கி கவுரவித்தார்.
Tags:    

Similar News