உள்ளூர் செய்திகள்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்களில் கிருமி நாசினி தெளித்தனர்.

இன்று 221 பேருக்கு கொரோனா

Published On 2022-01-17 09:24 GMT   |   Update On 2022-01-17 09:24 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,715 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 221 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 286 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் பலியானார்.

பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News