உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் நகராட்சியில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானதில் இதில் 22 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.
தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வனத்துறை அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பணிகளை மேற்கொண்டனர்.