உள்ளூர் செய்திகள்
கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு

கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு

Published On 2022-01-15 11:13 GMT   |   Update On 2022-01-15 11:13 GMT
கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் கோவில் வளாகத்தில் இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
Tags:    

Similar News