உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அய்யப்ப பக்தர் பிணமாக மீட்பு

Published On 2022-01-15 15:46 IST   |   Update On 2022-01-15 15:46:00 IST
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அய்யப்ப பக்தர் பிணமாக மீட்கப்பட்டார்.
சித்தோடு:

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அய்யப்ப பக்தர் பிணமாக மீட்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் வினுகொண்ட அஞ்சல் பகுதியை சேர்ந்த ராமாராவ், தனஜெயன்குமார், வீனாய், ரவீந்திரா மற்றும் டிரைவர் மன்சூர்அலி ஆகிய 5 பேர் நேற்று ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விட்டு  காரில் வந்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று காலை காரை சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் பவானி அருகே உள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் அருகில் நிறுத்தி விட்டு 5 பேரும் வாய்காலில் குளிக்க சென்றனர்.

இதில் ராமாராவ் (26) குளித்து கொண்டு இருக்கும் போது தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.  உடனே அவருடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர்.  தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் ராமாராவை காப்பாற்ற முடியவில்லை.

இதனைதொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்புநிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான வீரர்கள் காலை முதல் இரவு வரை தேடியும் ராமாராவ் உடல் கிடைக்கவில்லை.

இதனையடுத்து  இன்று காலை மீண்டும் 2-வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் குளித்த இடத்தில் இருந்து வெகுதொலைவில் ராமாராவ் பிணமாக மீட்கப்பட்டார்.

மேலும் இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News