உள்ளூர் செய்திகள்
அருப்புக்கோட்டையில் வாலிபருக்கு கத்திக்குத்து
அருப்புக்கோட்டையில் முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடரபாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் கார்த்திகை செல்வம் (வயது 33). இவரது உறவினர் குருமூர்த்தி (30). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் வழியாக கார்த்திகைசெல்வம் வந் தார். அப்போது அவரை சுரேஷ்குமாரின் மகன்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சுரேஷ்குமாரின் மகன்களில் ஒருவரான தினேஷ்குமார் (22) கத்தியால் கார்த்திகை செல்வத்தை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், தாமரைக் கண்ணன் ஆகியோர் வழக்குப் பதிந்து தினேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரை கைது செய்தனர்.