உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே சிலிண்டர் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
பொன்னேரி அருகே சிலிண்டர் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த நெடு வரம்பாக்கத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி வனரோஜா (55) நேற்று காலை கியாஸ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் டியூப் கழன்று அதன் வழியாக தீ வேகமாக பரவி ஓலைக்குடிசை எரிந்தது. உடனே அவர் வெளியே ஓடி வந்து அருகில் உள்ளவர்களின் உதவியுடன் சிலிண்டரை வெளியே தூக்கி போட்டு சிலிண்டரை அணைத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குடிசை மட்டும் எரிந்த நிலையில் வீட்டில் துணிகள், பொருட்கள் எரிந்து நாசமாகின.