உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்

கொடைக்கானலில் விபசார கும்பல் கைது

Published On 2022-01-13 08:48 GMT   |   Update On 2022-01-13 08:48 GMT
கொடைக்கானல் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
கொடைக்கானல்:

கொடைக்கானல் கான்வென்ட்ரோடு விறகு டெப்போ பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 போரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கொடைக்கானல் குருசாமி பள்ளத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 59), பூம்பாறையை சேர்ந்த ஜனகராஜ் (21), மதுரை பொன்மேனியைச் சேர்ந்த சரண் (21) என்பதும், வறுமையில் வாடும் இளம் பெண்களை வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி மசாஜ் சென்டரில் விபசாரத் தில் ஈடுபடுத் தியதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விபசாரத் தில் ஈடுபடுத் தப்பட்ட 2 பெண்களை மீட்டு பழனி மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்னர்.
Tags:    

Similar News