உள்ளூர் செய்திகள்
செய்யாறு அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் வெடால் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணு (வயது 35), இவரது மனைவி சசிகலா (24), சென்னை டி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகனும் ஒரு வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வெளியே சென்று வருவதாக குழந்தைகளுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மண்ணு அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.