உள்ளூர் செய்திகள்
பாரியூர்கொண்டத்து காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துகாளியம்மன்கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துகாளியம்மன்கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். மேலும் பெண்கள் பலர் பொங்கல் வைத்து சாமிதரிசனம் செய்தனர்.
இதில் கோபி, பாரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து அம்மனை வழிபட்டனர்.
குண்டம் விழாவையொட்டி இன்று இரவு குண்டம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து 50 அடி நீளம் கொண்ட குண்டம் வளர்க் கப்படுகிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தினர்.
நாளை அதிகாலை 5.30 மணிக்கு குண்டம்விழா நடக்கிறது. இதில் பூசாரிகள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் மட்டும் தீ மிதிக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை.
தொடர்ந்து நாளை காலை 9 மணிக்குமேல் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு வழி முறைகளை கடைப்பிடித்து சாமிதரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.