உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

சங்கராபுரம் அருகே 40 லிட்டர் சாராயம் கடத்தல்

Published On 2022-01-10 12:38 GMT   |   Update On 2022-01-10 12:38 GMT
சங்கராபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 40 லிட்டர் சாரயம் கடத்திய சம்பவத்தில் 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் புதுப்பாலபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

பின்னர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் சாக்குப்பையில் 40 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News