உள்ளூர் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2022-01-10 10:22 GMT   |   Update On 2022-01-10 10:22 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  உள்ள  கே.தொட்டியபட்டியை   சேர்ந்தவர்  மாரீஸ்வரன் (வயது 24), ஆட்டோ டிரைவர். நேற்று  இவர் தனது ஆட்டோவை ஓட்டிக் கொண்டு தொட்டியபட்டி யில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தார். 

தனியார் மில் அருகே   சென்றபோது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து   கவிழ்ந்தது. இதில் மாரீஸ்வரன் படுகாயம் அடைந்தார்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  பரிதாபமாக இறந்தார்.  

இதுகுறித்து தாயார் பொம்மக்காள் கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News