உள்ளூர் செய்திகள்
சாத்தூரில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
சாத்தூரில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக அந்த சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வன்னிமலை கிராமத்தைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயது தொடர்பான ஆவணங்களை பார்த்த போது அவர் திருமண வயதை எட்டவில்லை என தெரியவந்தது. இதுதொடர் பாக குழந்தை திருமணம் தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
குழந்தை பெற்ற பெண், தனது அத்தை மகன் கார்த் திக்கை 3 ஆண்டுகளாக காத லித்துள்ளார். தொடர்ந்து அவருடன் இருக்கன்குடி கோவிலில் திருமணம் செய்துள்ளார். ஆனால் அப்போது அவருக்கு 17 வயது என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் காதல் திருமணம் செய்தவர்கள் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில்தான் அந்த பெண் கர்ப்பம் அடைந்து குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆகாததால் குழந்தை திருமண சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.