உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2022-01-08 14:54 IST   |   Update On 2022-01-08 14:54:00 IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் குமார். ராணுவ வீரரான இவருக்கும் புவனேஸ்வரி (வயது36) என்பவருக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. குமார் 8 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். 

இந்நிலையில் புவனேஸ்வரி கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்,
புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள எனது கணவர் குமாரின் தந்தை வெள்ளைக்கண்ணு, அவரது மனைவி பூவாயி, மகன் வைரமணி, மகள் கீர்த்திகா ஆகியோர் என்னை கொடுமை படுத்தி தாக்குகின்றனர். மேலும்  தனது ஆசைக்கு இனங்க கூறி, வெள்ளைக்கண்ணு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

 புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்  இன்ஸ்பெக்டர் லதா,  மாமனார் வைரக்கண்ணு உட்பட  4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். 

Similar News