உள்ளூர் செய்திகள்
உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-01-08 12:52 IST   |   Update On 2022-01-08 12:52:00 IST
வீட்டின் பூட்டை உடைத்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா (வயது55) இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், மல்லிகா தனது மகள்கள் ரம்யா, சரண்யா, நித்தியா ஆகியோருடன் வசித்து வருகின்றார். 

இவர்கள் இரவு நேரத்தில் தூங்குவதற்கு மட்டும் அருகில் உள்ள தனது அண்ணன் ராமலிங்கம் வீட்டிற்கு சென்று, காலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தங்களது வீட்டை பூட்டிவிட்டு, ராமலிங்கம் வீட்டுக்கு தூங்க சென்றனர். இன்று காலை 6 மணி அளவில் மல்லிகா மற்றும் அவரது மூத்த மகள் ரம்யா ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் மற்றும் 2 பவுன் செயின்,  ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, மற்றும் ரொக்கம் ரூ 10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

Similar News