உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா

Published On 2022-01-08 12:44 IST   |   Update On 2022-01-08 12:44:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 69 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் 295 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 284 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தற்போது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து கொரோனா தொற்று பரவலில் இருந்து தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News