உள்ளூர் செய்திகள்
பட்டாசு

விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

Published On 2022-01-07 11:51 GMT   |   Update On 2022-01-07 11:51 GMT
விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:--

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் கூடுதல் மாவட்ட வருவாய் அதிகாரியால் உரிமம் வழங்கப்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் கூடுதல் வெடிபொருள் கட்டுப் பாட்டு அலுவலரால் உரி மம் வழங்கப்பட்ட பட்டாசு ஆலைகள் அனைத்திலும், அரசு விதிமுறைகளின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப் பிடப்பட்டுள்ள ஒரு தடவை அளவு மற்றும் ஆண்டளவிற்கு உட்பட்டு   அனுமதி வழங்கப்பட்ட பட்டாசு மற்றும் இதர வெடிபொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ வேண்டும். 

உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ந் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ,  விற்பனை செய்யவோ கூடாது. வெண்கலம் , பித்தளை , கன்மெட்டல் மற்றும் மரக்கட் டைகளால் செய்யப்பட்ட உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ரசாயன பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் அனைத்து நேர்வுகளிலும் அரசு சான்றிதழ் பெற்ற போர்மென் முன்னிலையிலேயே பணிகள் நடைபெற வேண்டும்.  18 வயதிற்கும் குறைவான பணியாளர்கள் எவரையும் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தக்கூடாது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு பயன்படுத்தப்படக்கூடாது. 

இடி-மின்னல் ஏற்படும் நேரங்களில் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தொழிற்சாலை கிட்டங்கிகளுக்கு அருகே பட்டாசுகளை சோதனை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட  அறைகளுக்கும் கூடுதலாக அறைகள் இருக்கக் கூடாது. மருந்து கலவைகள் கொண்ட கொள்கலன்கள், பேக்கிங் செய்யப்பட்ட பட்டாசு பெட்டிகள் ஆகியவற்றை தரையில் இழுத்துச் செல்லவோ அல்லது தள்ளிச் செல்லவோ கூடாது. 

வெடி பொருட்களை தயார்  செய்வதற்கான பணிகள் அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அறைகளை தவிர்த்து பிற பகுதிகளில் செய்யக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி அணுகுண்டு போன்ற வெடிகளை தயாரித்தல் கூடாது. அறைகளுக்கு இடையே வெளிப்புறங்களில் பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் கூடாது. தொழிற்சாலையின் உற்பத்தி அறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. தொழிற்சாலையினை  குத்தகைக்கு விடக்கூடாது அல்லது குத்தகை பணி யாளர்களை பணியில் அமர்த்துதல் கூடாது. 

சிறுகற்களை கொண்ட வெங்காய வெடி போன்றவை தயாரித்தல் கூடாது. மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்ய அமைக் கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது ஏதேனும் விதிமீறல்கள்  கண்டறியப்பட்டால்  தொடர்புடைய பட்டாசு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட உரிமம் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
 
இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News