உள்ளூர் செய்திகள்
திருக்கோவிலூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்- போலீசார் விசாரணை
திருக்கோவிலூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த மேலும் 3 பேருடன் அதே ஊரில் உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காலை உணவு சாப்பிடுவதற்காக வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நெடுநேரமாகியும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வராததால் உடன் வேலை செய்தவர்கள் சந்தேகப்பட்டு கிணற்றுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அய்யப்பன் போட்டிருந்த செருப்பும் தண்ணீர் எடுக்கச் சென்ற குடமும் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடன் கிணற்றில் மூழ்கி தேடிப் பார்த்தபோது அய்யப்பன் நீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த மேலும் 3 பேருடன் அதே ஊரில் உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காலை உணவு சாப்பிடுவதற்காக வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நெடுநேரமாகியும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வராததால் உடன் வேலை செய்தவர்கள் சந்தேகப்பட்டு கிணற்றுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அய்யப்பன் போட்டிருந்த செருப்பும் தண்ணீர் எடுக்கச் சென்ற குடமும் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடன் கிணற்றில் மூழ்கி தேடிப் பார்த்தபோது அய்யப்பன் நீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.