உள்ளூர் செய்திகள்
இரவு நேர ஊரடங்கை கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தல்
புதுக்கோட்டையில் இரவு நேர ஊரடங்களை சரியாக கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுக்கோட்டை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையம், பழைய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் ஒலிபெருக்கி மூலம் இரவு நேர ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்தனர்.
முதல் நாள் என்பதால் சிலரை போலிசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனிவரும் நாட்களில் ஊரடங்கை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், அதன் மூலம் கொரோனா பெருந்தொற்றை தடுக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.