உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2022-01-07 14:58 IST   |   Update On 2022-01-07 15:41:00 IST
புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 5 பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர் மச்சுவாடி டிரைவர் காலணி நான்காம் வீதியை சேர்ந்தவர் சோலையப்பன் மனைவி ராஜலட்சுமி (வயது 58). 

இவர் கடந்த 31&ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று அவர் சென்னையில் இருந்து மீண்டும் புதுக்கோட்டை திரும்பினார்.

வீட்டிற்கு சென்றபோது, அவரது வீட்டின் முன்பக்க கிரில் கேட்டின் பூட்டு மற்றும் உள்ளே இருந்த மரக்கதவும் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீதியுடன் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் தனி அறையில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 9 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்தார்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்திருந்த யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கனேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News