உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி மாயம்
கல்லூரி மாணவியை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வட குரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை என பல இடங்களில் தனது மகளை தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி எங்கே என தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவியை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வட குரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை என பல இடங்களில் தனது மகளை தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி எங்கே என தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவியை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.