உள்ளூர் செய்திகள்
தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-01-04 19:13 IST   |   Update On 2022-01-04 19:13:00 IST
அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 66). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டின் பின்புறம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Similar News