உள்ளூர் செய்திகள்
மோப்ப நாய் சிம்பா கொண்டு ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.

சாமி சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் மோப்ப நாய் கொண்டு ஆய்வு

Published On 2022-01-03 14:58 IST   |   Update On 2022-01-03 14:58:00 IST
காவேரிப்பாக்கம் அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் மோப்ப நாய் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.
காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருப்பாற்கடல் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து சாமி சிலைகளை உடைத்து தூக்கி வீசி உள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். 
இது சம்பந்தமாக கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். 

அது அதே பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் அருகே சென்று நின்று விட்டது.போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

Similar News