உள்ளூர் செய்திகள்
உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்

காவேரிப்பாக்கம் அருகே அம்மன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை

Published On 2022-01-02 12:48 IST   |   Update On 2022-01-02 12:48:00 IST
காவேரிப்பாக்கம் அருகே அம்மன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருபாற்கடல் பெருமாள்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்கை அம்மன் கோவில் உள்ளது.

இங்கு நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து கோவிலில் உள்ள சாமி சிலைகளை உடைத்து தூக்கி வீசியுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

உண்டியலை உடைக்கவும், சிலைகளை சேதப்படுத்தவும் மர்ம கும்பல் கடப்பாறை கம்பியை பயன்படுத்தியுள்ளனர். கடப்பாறை கம்பி ஒன்று அங்கு கிடந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News