உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பஸ், லாரி மோதி டிரைவர்கள் படுகாயம்

Published On 2022-01-01 14:55 IST   |   Update On 2022-01-01 14:55:00 IST
கோயம்புத்தூரில் இருந்து சென்ற லாரியும் பஸ்சும் மோதியதில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
சோளிங்கர்:

கோயம்புத்தூரில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரக்கோணத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சிதம்பரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றார். 

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் சென்ற போது சோளிங்கரில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு சென்ற பஸ் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பஸ் டிரைவர் கண்ணன் தமிழ்ச்செல்வன் இருவரும் வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News