உள்ளூர் செய்திகள்
கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூரை அடுத்த குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 66), விவசாயி. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.