உள்ளூர் செய்திகள்
மணல்

இலுப்பூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

Published On 2021-12-31 13:06 GMT   |   Update On 2021-12-31 13:06 GMT
இலுப்பூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் பகுதியில் வாகனங்களில் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா உள்ளிட்ட போலீசார் இலுப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் வேப்பங்கணிபட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு மற்றும் குறிச்சிப்பட்டியை சேர்ந்த சேவக பெருமாள் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News