உள்ளூர் செய்திகள்
திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் முதியவர் பிணம்
திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே ஆவியூர் தென்பெண்ணை ஆற்றில் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றியதோடு, இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் ராஜன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(வயது 82) என்பதும், கடந்த 23-ந் தேதி திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள தனது மகளை பார்க்க வந்தவர், தென்பெண்ணையாற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.