உள்ளூர் செய்திகள்
ஆற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை
ஆற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த உப்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 47). இவர் ஆற்காட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலாஜி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.