உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

ராணிப்பேட்டை அருகே கிரேன் மோதி பெண் பலி

Published On 2021-12-31 09:21 GMT   |   Update On 2021-12-31 09:21 GMT
ராணிப்பேட்டை அருகே கிரேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம், மலைமேடு ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 35). அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு அக்ராவரம் பொன்னை- சாலையில், மலைமேடு அருகே நடந்து சென்றபோது, பின்புறம் வந்த கிரேன் வாகனம் நாகம்மாள் மீது மோதியது. இதில் நாகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News