உள்ளூர் செய்திகள்
திருக்கோவிலூர் அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம்(வயது 46). டீ மாஸ்டரான இவர் கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பம்ப் ஹவுஸ் ரோட்டில் அவர் தங்கி இருந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பாா்த்தபோது உடல் அழுகிய நிலையில் அருணாசலம் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல்அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் அருணாசலம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து அருணாசலத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.