உள்ளூர் செய்திகள்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் வரத்து குறைவின் காரணமாக அதன் விலையும் உயர்ந்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை விவசாயிகள் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். சந்தைக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் தென்னம்பாளையம் சந்தைக்கு புடலங்காய் வரத்து பனியின் காரணமாக குறைவாக உள்ளது. வரத்துகுறைவின் காரணமாக அதன் விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி 15 கிலோ பை கொண்ட புடலங்காய் நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம் 15 கிலோ கொண்ட பை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.