உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

திருக்கோவிலூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-12-29 11:11 GMT   |   Update On 2021-12-29 11:11 GMT
திருக்கோவிலூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40). விவசாயியான இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன்(25) என்பவருக்கும் அங்குள்ள ஓடையில் மீன் பிடித்தபோது தகராறு ஏற்பட்டது.

இதன் முன்விரோதம் காரணமாக அதே ஊரில் உள்ள முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ராஜேந்திரனை அங்கு வந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் வெட்டுக்காயம் அடைந்த ராஜேந்திரன் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News