உள்ளூர் செய்திகள்
750 பவுன் நகை பின்புற பாழடைந்த கிணற்றில் மீட்பு- நாடகமா? என போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போனதாக கூறப்பட்ட 750 பவுன் நகை பின்புற பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீமிசல் பகுதியை அடுத்த கோபாலன்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக புருனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
அவருக்கு மகாதீர்முகமது (20), நஜீர்முகமது (12) ஆகிய 2 மகன்களும், ஜாஹிரா பானு (15) என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகாதீர் முகமது, கோபாலன்பட்டினத்தில் உள்ள அவரது அத்தை சாதிக்காபீவி வீட்டில் வசித்து வருகிறார்.
கோபாலன்பட்டினத்தில் உள்ள ஜகுபர் சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்காபீவி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். சாதிக்கா பீவி, கடந்த 24-ந் தேதி ஜகுபர்சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி காலை 10.30 மணியளவில் சாதிக்காபீவியின் மகள் உம்மல்ஹமீலா (35), ஜகுபர் சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு ஓரம் மிளகாய் பொடி பரவி கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தனது தாய் சாதிக்காபீவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் உள் அறைகள் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ, அலமாரி மற்றும் பெட்டிகளை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றிருந்தது தெரிய வந்தது.
இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்கா பீவி, புருணையில் உள்ள ஜகுபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோபாலன்பட்டினம் ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த 27-ந்தேதி கொள்ளை போன 750 பவுன் நகைகளை இன்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி உள்ளே வீசப்பட்டு இருந்தது.
அதனை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். அந்த நகைகளை போலீசார் நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
உண்மையிலேயே நகை கொள்ளை போனதா அல்லது வேண்டுமென்றே நகைகளை பாலித்தீன் பையில் மறைத்து கிணற்றுக்குள் வீசிவிட்டு புகார் கொடுத்த ஜாபர் சாதிக் நாடகம் ஆடுகிறாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீமிசல் பகுதியை அடுத்த கோபாலன்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக புருனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
அவருக்கு மகாதீர்முகமது (20), நஜீர்முகமது (12) ஆகிய 2 மகன்களும், ஜாஹிரா பானு (15) என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகாதீர் முகமது, கோபாலன்பட்டினத்தில் உள்ள அவரது அத்தை சாதிக்காபீவி வீட்டில் வசித்து வருகிறார்.
கோபாலன்பட்டினத்தில் உள்ள ஜகுபர் சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்காபீவி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். சாதிக்கா பீவி, கடந்த 24-ந் தேதி ஜகுபர்சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி காலை 10.30 மணியளவில் சாதிக்காபீவியின் மகள் உம்மல்ஹமீலா (35), ஜகுபர் சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு ஓரம் மிளகாய் பொடி பரவி கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தனது தாய் சாதிக்காபீவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் உள் அறைகள் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ, அலமாரி மற்றும் பெட்டிகளை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றிருந்தது தெரிய வந்தது.
இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்கா பீவி, புருணையில் உள்ள ஜகுபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோபாலன்பட்டினம் ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த 27-ந்தேதி கொள்ளை போன 750 பவுன் நகைகளை இன்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி உள்ளே வீசப்பட்டு இருந்தது.
அதனை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். அந்த நகைகளை போலீசார் நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
உண்மையிலேயே நகை கொள்ளை போனதா அல்லது வேண்டுமென்றே நகைகளை பாலித்தீன் பையில் மறைத்து கிணற்றுக்குள் வீசிவிட்டு புகார் கொடுத்த ஜாபர் சாதிக் நாடகம் ஆடுகிறாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.