உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

காரிமங்கலம் அருகே மூதாட்டியை மிரட்டி 3 பவுன் நகை பறிப்பு

Published On 2021-12-29 07:51 GMT   |   Update On 2021-12-29 07:51 GMT
காரிமங்கலம் அருகே மூதாட்டியை மிரட்டி 3 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் வெங்கிடியம்மாள் (வயது 80). இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மூதாட்டியின் வீட்டிற்கு 2 மர்ம நபர்கள் சென்றனர். அவர்கள், மூதாட்டியை மிரட்டி கழுத்தில் இருந்த செயின், காதில் இருந்த தோடு உள்ளிட்ட 3 பவுன் நகையை மிரட்டி பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News