உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

வாழைப்பழம் கொடுக்காததால் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-12-29 06:29 GMT   |   Update On 2021-12-29 06:29 GMT
வாழைப்பழம் கொடுக்காததால் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (50) இவர் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். இரவு கடையை மூடிவிட்டு வந்தபோது அனுப்பம்பட்டு அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்த அருண் மது போதையில் தனபாலிடம் வாழைப் பழம் கேட்டார். அப்போது கடையை மூடி விட்டதாக கூறிய அவரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டினார்.

அதனைத் தடுக்க வந்த தனபாலின் மனைவி முருகம்மாள் என்பவரை கீழேதள்ளிவிட்டு அருண் தப்பி ஓடிவிட்டார். தலையில் காயம் பட்டவரை அருகில் உள்ளவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News