உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2021-12-28 06:21 GMT   |   Update On 2021-12-28 06:21 GMT
பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி:

மதுரை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சமையன். இவருடைய மகன் வெள்ளைச்சாமி (வயது 25). இவர் பரமக்குடி அருகே உள்ள சேம்பர் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மஞ்சக்கொல்லை வழியாக சென்றபோது பொட்டி தட்டி நோக்கி செங்கல் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கொல்லனூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News