உள்ளூர் செய்திகள்
ஆவுடையார்கோவில் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
ஆவுடையார்கோவில் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அருகே துரையரசபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பொன்னுசாமி (வயது 47), குண்டகவயல் மருதங்குடி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (21) ஆகிய 2 பேரையும் ஆவுடையார் கோவில் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.