உள்ளூர் செய்திகள்
திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி புது தெருவில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கம்மாபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காமராஜ் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், காமராஜ் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.