உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது
அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி சித்தி விநாயகர் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய அறந்தாங்கி எல்.என்.புரத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.1,860 பறிமுதல் செய்யப்பட்டது.