உள்ளூர் செய்திகள்
திருவரங்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
திருவரங்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவரங்குளம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), தொழிலாளி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள கொட்டன் காடு பகுதியை சேர்ந்த தனது சித்தி ஜெயலட்சுமி (68) வீட்டுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தார். நேற்று அருகே உள்ள புது குளத்தில் குளிக்க சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் கரையில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி குளத்தின் ஆழமான பகுதியில் விழுந்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.