உள்ளூர் செய்திகள்
கைது

ஏகாம்பரநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

Published On 2021-12-24 15:55 IST   |   Update On 2021-12-24 15:55:00 IST
ஏகாம்பரநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 40). இவர் அதேப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீசார், சக்தியை கைதுசெய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News