உள்ளூர் செய்திகள்
கைது

வாடகை வீட்டில் விபச்சாரம்: புரோக்கர் கைது - அழகிகள் மீட்பு

Published On 2021-12-24 09:27 GMT   |   Update On 2021-12-24 09:27 GMT
கோவை அருகே வாடகை வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகளை மீட்ட போலீசார் புரோகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குடும்பம் நடத்துவ போல வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதனையடுத்து போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. 

அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் ரவி தாமஸ் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்த 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News