உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பொன்னமராவதியில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கணக்கெடுப்பு

Published On 2021-12-23 00:44 IST   |   Update On 2021-12-23 00:44:00 IST
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் செலுத்திக் கொள்ளாதவர்கள் கணக்கெடுக்கும் பணி சுகாதாரத்துறை சார்பில் நடந்தது. குறிப்பாக மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த பணியில், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், உத்தமன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Similar News