உள்ளூர் செய்திகள்
கொள்ளை

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு

Published On 2021-12-22 23:20 IST   |   Update On 2021-12-22 23:20:00 IST
இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 40). இவரது வீட்டு முன்பு சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் பையில் வைத்திருந்த 10½ பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News