உள்ளூர் செய்திகள்
கைது

அறந்தாங்கியில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

Published On 2021-12-22 17:43 GMT   |   Update On 2021-12-22 17:43 GMT
அறந்தாங்கியில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி இந்திரா நகரை சேர்ந்தவர் வனிதா (வயது 32). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது இரு சக்கர வாகனத்தை கடை எதிரே நிறுத்தி இருந்தார். பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனத்தை காணாது திடுக்கிட்டார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அக்ரஹார பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News