உள்ளூர் செய்திகள்
பெண் தற்கொலை

பெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-22 15:26 IST   |   Update On 2021-12-22 15:26:00 IST
பெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் தோப்புசாலையை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி ராணி (வயது 48). துரைசாமி சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்ததால் ராணி விரக்தியாக இருந்து வந்தார். மேலும் தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ராணி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராணியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News