உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 826 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள்- கலெக்டர் ராகுல்நாத் தகவல்

Published On 2021-12-22 14:43 IST   |   Update On 2021-12-22 14:43:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு:

நெல்லையில் அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆராய கல்வித்துறை உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆதிதிராவிட நலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பு கீழ் இயங்கும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கீடு செய்யும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது

இதில் ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் 41 பழுதடைந்த கட்டிடங்கள், பொதுப் பணித்துறை பராமரிப்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 119 பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் , ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 666 பழுதடைந்த கட்டிடங்கள் என மொத்தம் 826 பழுதடைந்த கட்டிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆய்வு செய்யப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களில் 196 கட்டிடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 173 கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் நிலுவையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

Similar News