உள்ளூர் செய்திகள்
தற்கொலை

வேப்பந்தட்டை அருகே தாய் திட்டியதால் மகன் தற்கொலை

Published On 2021-12-21 16:35 IST   |   Update On 2021-12-21 16:35:00 IST
வேப்பந்தட்டை அருகே தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 28). விவசாயி. இவரை, இவரது தாய் சரோஜா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாதபோது பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News